காஷ்மீர் பிரச்சினையில் ஐ.நா. தலையிட வேண்டும் ...முஷாரப்
நியூயார்க்:
காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. சபை தலையிட்டுத் தீர்வு காண உதவ வேண்டும் என்றுபாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா. சபையின் மில்லனியம் மாநாட்டில் கலந்து கொள்ள முஷாரப் நியூயார்க்சென்றுள்ளார். வியாழக்கிழமை ஐ.நா. சபையில் அவர் பேசினார்.
முஷாரப் தனது பேச்சில், காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியாவுக்கு அக்கறைஇல்லை. இதனால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீர் ரணகளமாகமாறியுள்ளது. நியாயம் கேட்டு காஷ்மீர் கதறி வருகிறது.
காஷ்மீர் முழுவதும் இந்தியா ராணுவத்தைக் குவித்து வைத்துள்ளது. உலகிலேயே அதிகஅளவு ராணுவம் குவிக்கப்பட்டுள்ள பகுதியாக காஷ்மீர் உள்ளது.
காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டிருப்பதற்கு இந்தியாவேகாரணம். பாகிஸதான் பேச்சுவார்த்தைக்கு ஒத்துக் கொண்டும் கூட அதை இந்தியாஏற்றுக் கொள்ளவில்லை. அதைத் தவிர்த்து வருகிறது.
இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட ஒரு தரப்பு, ஒத்துழைக்க மறுப்பதால், ஐ.நா.சபையே தலையிட்டுத் தீர்வு காண உதவ வேண்டும். பாலஸ்தீனம், கொசாவோ, கிழக்குதைமூர் ஆகிய இடங்களில் அமைதி காண ஐ.நா. தலையிட்டபோது, காஷ்மீர்விவகாரத்திலும் ஐ.நா. தலையிட வேண்டும் என்று பேசினார் முஷாரப்.