For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீர்: இந்தியாவை ஐ.நா.வற்புறுத்த வேண்டும் என்கிறார் முஷாரப்

By Staff
Google Oneindia Tamil News

நியூயார்க்:இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலுள்ள காஷ்மீர் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண பாகிஸ்தான் தயாராக இருப்பதாக, பாகிஸ்தான் ராணுவஆட்சியாளர் பெர்வீஸ் முஷாரப் வியாழக்கிழமை தெரிவித்தார்.

நியூயார்க்கில் நடக்கும் ஐ.நா.சபை மில்லினியம் வருடக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார் முஷாரப். அங்கு வியாழக்கிழமைசெய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா, பாகிஸ்தானிடையே 1948 ம் ஆண்டு முதல் காஷ்மீர் பிரச்சனை இருந்து வருகிறது. இந்தப் பிரச்சனைக்கு விரைவில்முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இந்தியா அணு ஆயுதங்களைக் கீழே போட்டு, எல்லையில் உள்ள ராணுவ வீரர்களை வாபஸ் பெற்றால் நாங்களும் அணு ஆயுதங்களைக் கீழே போடதயாராக இருக்கிறோம். தீவிரவாதத்தால் எந்தப் பயனும் இல்லை. காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண பாகிஸ்தான் எந்த நிலைப்பேச்சுவார்த்தைக்கும் தயாராக இருக்கிறது.

சமீபத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் போர்நிறுத்தம் அறிவித்திருந்தது. அதற்குப்பின் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.அதற்கு இந்தியாவும் சம்மதம் தெரிவித்தது. ஆனால் பாகிஸ்தானையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்ற ஹிஸ்புல் கேட்டுக்கொண்டதைஇந்தியா ஏற்கவில்லை. இதனால் போர் நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

ஐ.நா.சபையும், அமெரிக்க அதிபர் பில்கிளின்டனும் சேர்ந்து காஷ்மீர் பிரச்சனை குறித்து தீர்வு காண இந்தியாவைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.தெற்காசியாவில் அமைதியைக் குலைக்கும் வகையில் இருந்து வருவது காஷ்மீர் பிரச்சனைதான். இதற்கு சுமூகத் தீர்வு காண வேண்டும் என்றார்முஷாரஃப்.

மேலும், காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண தன்னால் இயன்ற அளவு உதவுவதாகத் தெரிவித்த வங்கதேச பிரதமருக்கும் நன்றி கூறினார் முஷாரப்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X