உத்தரப் பிரதேசத்தில் படகு கவிழ்ந்து 35 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் படகு ஆற்றில் கவிழ்ந்ததில் 35 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், ராம்பூர் மாவட்டத்தில் உள்ள பீலாக்பூர் ஆற்றில் இச்சம்பவம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடந்தது.
ஆற்றில் கவிழ்ந்த படகில் 40 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். படகு திடீரென்று கவிழ்ந்ததில் 40 பேரும் ஆற்றுக்குள் விழுந்தனர். 5 பேர்நீச்சலடித்து கரைக்கு வந்து விட்டனர்.
நீரில் மூழ்கி இறந்த 35 பேரின் சடலங்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications