கருணாநிதி-கிருஷ்ணா பிரஸ் மீட்டில் மொழிப்பிரச்சனை
பெங்களூர்:
பெங்களூரில் வெள்ளிக்கிழமை தமிழக முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வர் கிருஷ்ணா ஆகியோர் பங்கேற்ற நிருபர்கள் கூட்டத்தில் வீணாக மொழிப்பிரச்சனையைக் கிளப்ப முயற்சி நடந்தது.
இதை இரு முதல்வர்களும் சமயோஜிதமாக முறியடித்தனர்.
ராஜ்குமாரை மீட்பது குறித்தும், உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கு குறித்தும் தமிழக முதல்வர் கருணாநிதியும், கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவும்வெள்ளிக்கிழமை பெங்களூரில் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனை முடிந்ததும் இருமாநில முதல்வர்களும் சேர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.
அப்போது நிருபர் ஒருவர் கன்னடத்தில் கேள்வி கேட்டார். அதற்குப் பதிலளித்த கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, தமிழக முதல்வரும், அவரது அமைச்சரவைஉறுப்பினர்களும் இங்கு வந்துள்ளனர். அவர்களுக்குப் புரியும் வகையில் உங்கள் கேள்வியை ஆங்கிலத்தில் கேளுங்கள் என்றார்.
அப்போது குறிக்கிட்ட இன்னொரு நிருபர், சென்னையில் தமிழில்தான் பத்திரிக்கையாளர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது என்றார்.
பதிலளித்த முதல்வர் கிருஷ்ணா மொழிப்பிரச்சனையைக் கிளப்ப வேண்டாம் என்றார்.
அப்போது குறுக்கிட்ட, தமிழக முதல்வர் கருணாநிதி, நான் தமிழில் பேசுகிறேன். அதை தமிழக சட்ட அமைச்சர் ஆலடி அருணா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறுவார் என்று கூறி மொழிப் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்கள் கூட்டம் நடந்தது.












Click it and Unblock the Notifications