ஏப்ரலில் தமிழக சட்டசபைத் தேர்தல்
சென்னை:
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் வரும் 2001 ஆண்டு ஏப்ரலில் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இத் தகவலை இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சென்னையில் நிருபர்களிடம் சனிக்கிழமை தெரிவித்தார்.
வாக்காளர்களுக்கு புகைப்படம் ஒட்டிய அடாையள அட்டை வழங்கும் பணி தமிழ்நாட்டில் எப்படி நடக்கிறது என்பது பற்றிஆலோசிக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டத்தை அகில இந்திய தேர்தல் கமிஷன் கூட்டியது.
சென்னையில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர்ஏ.பி.த்துசாமி, தேர்தல் கமிஷனின் முதன்மைச் செயலாளர் ஏ.என். ஜா, தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா,நிதித்துறையின் சிறப்புச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் நிருபர்களைச் சந்தித்த தேர்தல் கமிஷ்னர் கிருஷ்ணமூர்த்தி. தமிழ்நிாட்டில் சட்டசபையின் பதவிக் காலம்அடுத்த ஆண்டு மே மாதம் 21- ம் தேதி வரை இருக்கிறது. நாங்கள் அதற்கு முன்பாக அதாவது ஏப்ரல் மாதத்திலேயே தேர்தலைநடத்திவிடலாம் என்று இருக்கிறோம்.
எனவே, ஏப்ரல் மாதம் தேர்தல் நடக்க வாய்ப்பு உண்டு. முன் கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்று மாநில அரசுவிரும்பினால் அதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டியுள்ளதால்முன்கூட்டியே தேர்தல் நடத்துவதில் பிரச்சனை உள்ளது என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் புகைப்பட அடையாள அட்டை வழங்கும் பணி மிகவும் மந்தமாகவே உள்ளது. இது 57 சதவீதத்தைமட்டுமே எட்டியுள்ளது. தேர்தலுக்குள் குறைந்தது 70 சதவீதம் மக்களுக்காவது புகைப்பட அடையாள அட்டைவழங்கப்பட வேண்டும். இதற்கு மாவட்டக் கலெக்டர்கள் உதவி புரிய வேண்டும்.
சமீபத்தில் திருச்சி தொகுதி எம்.பி.யும், மத்திய மின்சாரத்துறை அமைச்சருமான ரங்கராஜன் குமாரமங்கலம்மரணமடைந்ததால் அந்த நாடாளுமன்றத் தொகுதியில் இடைத் தேர்தலை நடத்த வேண்டும். அதை எப்போதுநடத்துவது என இன்னும் முடிவு செய்யவில்லை என்றார் கிருஷ்ணமூர்த்தி.