மீண்டும் காட்டுக்குள் செல்லத் தயார்: விக்ரமாதித்தன் கோபால் அறிவிப்பு
சென்னை:
வீரப்பனிடம் மீண்டும் தூது செல்ல தயாராக இருக்கிறேன் என்று நக்கீரன் கோபால் தெரிவித்தார்.
ஆள்-சந்தன மரக் கடத்தல் மன்னன் வீரப்பன் பிடியில் சிக்கி காட்டில் பிணைக் கைதியாக இருக்கும் கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக இருமாநில அரசு தூதராக செயல்பட்டவர் நக்கீரன் கோபால்.
மூன்று தடவை காட்டுக்கு தூது சென்று வீரப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்திய கோபால், வெறும் கையோடு தான் திரும்பி வந்தார்.
இந்நிலையில் அவர் மீண்டும் தூதராக அனுப்பப்படுவார் என்று இரு மாநில அரசுகளும் அறிவித்துள்ளன. இரு மாநில முதல்வர்களும் பெங்களூரில் நடத்தியஆலோசனைக்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து நக்கீரன் கோபால் சென்னையில் சனிக்கிழமை அளித்த பேட்டி:
கைதிகளை விடுவிக்கும் பிரச்னையில் வீரப்பன் பிடிவாதமாக இருக்கிறான். எனவே தான் ராஜ்குமாரை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக - கர்நாடக அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்.
வீரப்பனுடன் பேச்சு நடத்த நான் மீண்டும் காட்டுக்கு செல்ல தயாராக இருக்கிறேன். வீரப்பன் திருப்தி அடையும் வகையில் இரு மாநில அரசுகளும்நடவடிக்கைகள் மேற்கொண்டு, அதற்கான திட்டத்தை என்னிடம் அளிக்கும். அதன்பின்னர் நான் காட்டுக்கு கிளம்புவேன் என்றார் அவர்.