மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் இனி கம்ப்யூட்டர் பயிற்சி
சென்னை:தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இவ்வாண்டு முதல் ரூ. 56 லட்சம் ரூபாய் செலவில் கம்ப்யூட்டர் மற்றும் இண்டர்நெட்பற்றிய பயிற்சி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், பாஸ்டன் பன்னாட்டு மருத்துவ மையம் இணைந்து தொலை மருத்துவத் திட்டத்தை செயல்படுத்த முன்வந்துள்ளன. இத்திட்டத்தை முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்.
விழாவில் அவர் பேசுகையில், தொலை மருத்துவத் திட்டம் என்ற இந்த திட்டத்தில் "தொலை என்ற சொல்ல நல்ல சொல்லாக எனக்குப் படவில்லை."விட்டுத் தொலை என்று சொல்வார்களே அதுபோன்ற அர்த்தத்தை உருவாக்கி விடக்கூடாது.
எனவே இதை விட பொருத்தமான வார்த்தை கண்டறியப்பட்டு விரைவில் புதிய பெயர் சூட்டப்படும். மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் கம்ப்யூட்டர் மற்றும் இணையம் பற்றிய பயிற்சி அளிக்கப்படும்.
இத் திட்டத்திற்கு அரசு ஆண்டுதோறும் 56 லட்சம் ரூபாய் செலவிட உள்ளது. இத் திட்டத்தில் 50 மணி நேரம் தியரி, 100 மணி நேரம் பிராக்டிக்கல் என்றவிகிதத்தில் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.
முன்னதாக மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு பேசுகையில், தமிழக அரசு சமுதாய இணையக் கூடங்கள் (சமுதாய இன்டர்நெட் மையம்) அமைக்கும் திட்டத்தைசெயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அது செயல்படத் தொடங்கினால் தொலை மருத்துவ மையத்திற்கு மிக உதவியாக இருக்கும் என்றார்.