ராகிங்கால் மாணவி தற்கொலை: சீனியர் மாணவர்களுக்கு ஜாமீன் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராகிங் கொடுமைக்கு அப்பாவி மாணவ மாணவிகள் பலியாவதை நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்காது என்று சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாணவி தீபா. காஞ்சிபுரம் கீழாம்பியில் உள்ள கிருஷ்ணா கல்லூரியில் பி.எஸ்.சி மைக்ரோ பயாலஜி பிரிவில் முதலாமாண்டுமாணவியாகச் சேர்ந்தார். அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் மற்றும் மாணவிகள் சிலரும் சேர்ந்து கொண்டு தீபாவை ராகிங் செய்தனர்.பாட்டுப்பாடு, நிர்வாணமாக நடனமாடு என்று வற்புறுத்தி கொடுமை செய்தனர்.

இந்த அவமானம் தாங்காமல் தீபா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தீபா, நீதிபதியிடம் கொடுத்த மரணவாக்குமூலத்தின் அடிப்படையில்வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாணவி மோகனவல்லி, மாணவர்கள் சத்யமூர்த்தி, சசி ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூர்த்தி,சசிஆகிய இரு மாணவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி முருகேசன் தனது தீர்ப்பில் ராக்கிங் கொடுமைகள் பற்றி கடுமையாக தீர்ப்பு அளித்திருக்கிறார்.உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன் வழங்கியுள்ள தீர்ப்பில், எதிர்காலக் கனவுகளுடன் மகிழ்ச்சியாக காஞ்சிபுரம் கிருஷ்ணா கல்லூரியில் முதலாவது ஆண்டு படிப்பில்சேர்ந்த மாணவி தீபாவுக்கு 04-08-2000 முதல் 10-08-2000 வரையிலான நாட்கள் விதியின் வலிமையால் துக்ககரமாண நாட்களாகமாறிவிட்டன.

ஏழு அல்லது எட்டு மாணவ மாணவிகள் சேர்ந்து தீபாவை கொடுமையும், கேலியும் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய தொந்தரவு தாங்க முடியாமல்அதில் இருந்து தப்பிக்க அவர் தனக்குத்தானே மண்ணெனைய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தீபாவின் மரண வாக்குமூலத்தில், மூத்த மாணவ மாணவிகள் தொடர்ந்து கேலி செய்து வருவதை தாங்க முடியாமலும், மேலும் கேலி செய்வதில் இருந்துதப்பவுமே நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இந்த செயல் மிகவும் கொடூரமானது தற்பொழுதைய காலகட்டத்தில் ஏதோ ஜாலிக்காக முதலில் கேலி செய்வதில் ஆரம்பித்து, பின்னர் அதுவேவிபரீதமாக மாறி விடுவதும் மாணவர்களிடையே வாடிக்கையாகிவிட்டது.

இது போன்ற கொடூரமான, ஈனத்தனமான குற்றங்கள் நடந்து ஏதும் அறியாத அப்பாவி மாணவ-மாணவிகள் பலியாவதை இந்த நீதிமன்றம்கண்களை மூடிக்கொண்டு மெளனமாக பார்த்துக் கொண்டிருக்காது. இது போன்ற செயல் வன்மையாக கண்டிக்க தக்கது.

எனவே குற்றத்தின் கொடூரத்தன்மையைக் கருத்தில் கொண்டு அப்பாவி, இளம் மாணவியின் சாவுக்குக் காரணமாக இருந்த மாணவர்களுக்கு ஜாமீன்வழங்க முடியாது. அவர்களின் மனுவை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு நீதிபதி முருகேசன் தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+