ராமகோபாலன் கைதைக் கண்டித்து கோவையில் கடையடைப்பு
கோவை:
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விநாயகர் ஊர்வலத்தின்போது இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலன்கைதாகி விடுதலை செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் கடையடைப்பை நடத்த இந்து முன்னணி அழைப்புவிடுத்துள்ளது.
இந்து முன்னணி சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்குஇந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் தலைமை வகித்தார். திருவல்லிக்கேணி வழியாகச் சென்ற ஊர்வலம்சென்னை ஐஹ்ஹவுஸ் மசூதி வழியே செல்ல முயன்றது.
அப்போது போலீஸார், மசூதி வழியே ஊர்வலம் நடத்த விடாமல் தடுத்தார். இதையடுத்து ராமகோபாலன் அந்தஇடத்திலேயே உட்கார்ந்து போராட்டம் நடத்தினார். இதையடுத்து ராமகோபாலன் உள்பட 31 இந்துமுன்னணியினரைப் போலீஸார் கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர்.
இதனைக் கண்டித்து கோவையில் கடையடைப்பு நடத்த இந்து முன்னணி திங்கள்கிழமை அழைப்பு விடுத்துள்ளது.கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் கடைகளை அடைக்க இந்து முன்னணித் தொண்டர்கள் கூறியிருந்தபோதிலும்,பந்த்திற்கு போதுமான ஆதரவு இல்லை. ஞாயிற்றுக்கிழமை மாலையில் சிலர் கோவை டாடாபாத்தில் பஸ் மீதுகல்வீசித் தாக்கினர். இதுதொடர்பாக, 23 இந்து முன்னணியினரைப் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் முழுவதும் இந்து முன்னணித் தொண்டர்கள் 200 பேர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகக்கைது செய்யப்பட்டுள்ளனர். நகரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புறநகர் பகுதிகளான திருப்பூர்,மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.