100 சதவீத சுத்தமான அணி .. தெ.ஆப்பிரிக்கா பெருமிதம்
ஜோஹன்னஸ்பர்க்:
சிட்னி ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் தென் ஆப்பிரிக்க அணி உலகிலேயேசிறந்த, தூய்மையான அணி என அந்நாட்டு தேசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் சாம்ராமசாமி கூறியுள்ளார்.
சிட்னி ஒலிம்பிக் போட்டியில் 100 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி கலந்துகொள்கிறது. இந்த அணி வீரர்கள் அனைவரையும் சோதித்த ஜோஹன்னஸ்பர்க்நகரிலுள்ள ரான்ட் ஆப்ரிகன்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், வீரர், வீராங்கனைகள்யாரும், ஒலிம்பிக் போட்டிகளில் தடை விதிக்கப்பட்ட பொருட்களைபயன்படுத்தவில்லை என்று சான்று கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து ராமசாமி கூறுகையில், தென் ஆப்பிரிக்க அணிதான் இப்போதைக்குதூய்மையான அணியாகத் திகழ்கிறது என்றார்.
ஒலிம்பிக் போட்டிகள் துவங்குவதற்கு முன்பே கருத்து வேறுபாடுகள் துவங்கி விட்டன.இதுவரை 33 வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் தடை செய்யப்பட்ட மருந்துகள்,போதைப் பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்தியதற்காக போட்டிகளில் கலந்துகொள்வதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளனர்.
உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த தடகள பயிற்சியாளர் கடுமையான தண்டனையைஎதிர்நோக்கிக் காத்துள்ளார். அவருக்கு அபராதம் அல்லது சிறைத் தண்டனைவிதிக்கப்படும் என்று தெரிகிறது. மனித ஹார்மோன்களை அவர் பாக்கெட்டில்வைத்துக் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர் தடைசெய்யப்பட்டுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.