கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொன்ற புனிதத் தாய்
வேலூர்:
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த தனது இரண்டு குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்றார் ஒரு புனிதத் தாய்.
வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த அத்திப்பட்டு என்ற ஊரைச் சேர்ந்தவர் புனிதா (27). இவரது கணவர் முரளி. இவர்களுக்கு ப்ரியா(9), அரவிந்தன் (7) என்ற இரண்டு குழந்தைகள்.
சில மாதங்களுக்கு முன்பு முரளி இறந்து போனார். இதனால் தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில், புனிதாவுக்கும் அதே ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர்.ஆனால், இடையூறு இன்றி அவர்களால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை.
வெளியிடங்களில் சந்தித்தால் தெரிந்தவர்கள், உறவினர்கள் தொந்தரவு. வீட்டிலோ குழந்தைகள் பார்த்து விடுவார்களோ என்ற பயம்.
இதனால் என்ன செய்வது என்று குழம்பிய புனிதாவுக்கு, குழந்தைகளை விட கள்ளக்காதலும் அதனால் கிடைக்கும் சந்தோஷமுமே பெரிதாக பட்டது.குழந்தைகளை கொன்று விட்டால், கள்ளக் காதலுடன் வீட்டில் உறவு கொள்ள எந்த தடையும் இருக்காது என்று எண்ணினார்.
அதன்படி குழந்தைகளை கொன்று விட தீர்மானித்தார். பெற்ற குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்தமான ஜிலேபியை வாங்கி வந்தார். அதில் விஷயத்தைகலந்து இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்தார். ஆசையுடன் அதைத் தின்ற குழந்தைகள் இருவரும் சிறிது நேரத்தில் துடி துடித்து இறந்தனர்.
காமம் கண்ணை மறைக்க பெற்ற குழந்தைகளை கொலை செய்து விட்ட நிலையில், அதை மறைக்க வழி தெரியாமல் திணறினார். அக்கம் பக்கத்தவர்மூலம் தகவல் போலீசுக்கு போக, விசாரணையில் வசமாக சிக்கிக் கொண்டார். விஷயம் தெரிந்து ஊரே அந்த குழந்தைகளுக்காக பரிதாபப்பட்டது.












Click it and Unblock the Notifications