ஆற்றில் கவிழ்ந்த பஸ் ..உயிர் தப்பிய பயணிகள்
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ஆற்றில் பஸ் உருண்டு விழுந்ததில் அதில் பயணம் செய்த 70 பயணிகள் லேசானகாயங்களுடன் உயிர்தப்பினர்.
கும்பகோணத்திலிருந்து அந்தியூர் நோக்கி பஸ் ஒன்று திங்கள்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் மிகவும் வேகமாகஓட்டியுள்ளார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அருகிலிருந்த மண்ணியூர்ஆற்றுக்குள் விழுந்தது.
இதில் பஸ்சில் பயணம் செய்த 70 பேரும் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்களும், பள்ளிச் சிறுவர்களும் ஆவர்.












Click it and Unblock the Notifications