சந்திரிகாவை கொலை செய்ய சதி
கொழும்பு:
தேர்தல் பிரச்சாரத்தின் போது இலங்கை அதிபர் சந்திரிகாவை கொலை செய்யத் திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, 7 விடுதலைப்புலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 10 ம் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் பிரசாரம் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.இந்த நிலையில் அதிபர் சந்திரிகாவை தேர்தல் பிரசாரத்தின்போது கொலை செய்யத் தீட்டப்பட்டிருந்த சதி அம்பலமாகியுள்ளது.
சந்திரிகா தவிர ராணுவ துணைஅமைச்சர் அனிருதா ரத்வத்தே யையும் கொலை செய்ய விடுதலைப்புலிகள் திட்டம் தீட்டியிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்துபோலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
தலைநகர் கொழும்பு, மட்டக்களப்பு, புசல்வா ஆகிய இடங்களில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி 7 விடுதலைப்புலிகளைக் கைது செய்தனர். நாடு முழுவதும்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே இலங்கை தலைமை தேர்தல் கமிஷனர் தயானந்த திசநாயகா, அங்குள்ள தனியார் அச்சகத்தில் லட்சக்கணக்கான வாக்குச் சீட்டுக்களைஅச்சடிக்க உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி புகார் கூறியுள்ளது. அரசு அச்சகத்தில் வாக்குச் சீட்டுக்களை அச்சடிக்காமல் தனியார்அச்சகத்தில் வாக்குச் சீட்டுக்களை அச்சடிக்க உத்தரவிட்டிருப்பது ஏன் என்று எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த அதிபர் சந்திரிகா உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications