சயனைட் ஸ்வீட்... கோவை ஜெயிலில் அடையாள அணிவகுப்பு
கோவை:
சயனைடு இனிப்புகள் அடங்கிய பார்சலை போலீசாருக்கு அனுப்பிய வழக்கில்செவ்வாய்க்கிழமை அடையாள அணி வகுப்பு நடந்தது.
கோவை உக்கடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மர்மபார்சல் வந்தது. இந்த பார்சலில் சயனைடு தடவப்பட்ட சில பழங்கள் மற்றும்இனிப்புகள் இருந்தது.
போலீசாரைக் கூண்டோடு தீர்க்கத் திட்டம் தீட்டப்பட்டு அனுப்பப்பட்ட இந்த பார்சல்குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்குத் தொடர்பாக அக்பர்என்பவரை போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு இந்தவழக்கையும் விசாரித்து வருகிறது. கொரியர் சர்வீஸ் மூலம் அனுப்பப்பட்ட இந்தபார்சலை அனுப்பியவரைக் கண்டுபிடிக்கும் அடையாள அணி வகுப்பு நடந்தது.
இதில் கொரியர் சர்வீஸ் நடத்தி வருபவர், அக்பரை அடையாளம் காட்டும்அணிவகுப்பு, கோவை மாஜிஸ்திரேட் முன்னிலையில் நடந்தது.












Click it and Unblock the Notifications