கபிலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு
டெல்லி:
இந்திய அணிக்குப் பயிற்சி அளிக்க வாருங்கள் என்று கபில்தேவுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ள கபில் தேவ் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதையடுத்து அவர் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்துநீக்கப்படுவார் என்று கூறப்பட்டது.
புதிய பயிற்சியாளராக வெளிநாட்டு நபர்கள் நியமிக்கப்படலாம் என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், சில தினங்களுக்கு முன்பு நிருபர்களைச் சந்தித்த வாரியத் தலைவர் ஏ.சி. முத்தையா, இந்திய அணியின் பயிற்சியாளராக கபில்தேவ் தொடர்ந்து நீடிப்பார்என்று அறிவித்தார்.
இதையடுத்து கென்யாவில் நடைபெறும் ஐ.சி.சி. நாக்-அவுட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிக்குப் பயிற்சி அளிக்க வரும்படி கபில்தேவுக்குவாரியச் செயலர் லேலே கடிதம் எழுதியுள்ளார்.
அக்டோபர் 3-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை கென்ய தலைநகர் நைரோபியில் ஐ.சி.சி. நாக்-அவுட் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
இதற்காக இந்திய அணிக்கு 23 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு செப்டம்பர் 14-ம் தேதி முதல் 23-ம் தேதி சென்னையில் பயிற்சிஅளிக்கப்பட உள்ளது.
பயிற்சியின் இடையே செப்டம்பர் 20-ம் தேதி கென்யா போட்டிக்கான 14 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications