வாஜ்பாய்க்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பேன் .. கிளிண்டன்
டெல்லி:
பிரதமர் வாஜ்பாயைச் சந்திப்பதற்கு அமெரிக்க அதிபர் கிளிண்டன் ஆர்வம்தெரிவித்துள்ளார்.
ஸ்டார் டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், நானும், வாஜ்பாயும் விரைவில்சந்திக்கவுள்ளோம். இந்த சந்திப்பை ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளேன்.
நான் இந்தியா சென்றிருந்தபோது எனக்கு ராஜ மரியாதை கொடுக்கப்பட்டது. எனவேவாஜ்பாய்க்கும் அதே மாதிரியான வரவேற்பைத் தர ஆவலாக உள்ளேன்.
எனது இந்தியப் பயணத்தை மறக்க முடியாது. நான் மட்டுமல்ல, எனது மனைவி, மகள்,மாமியார் என எனது குடும்பமே இந்தியப் பயணத்தை மறக்க முடியாது. இருநாடுகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு அது. இப்போதுஅமெரிக்காவிற்கு வந்திருக்கும் வாஜ்பாயை சந்திப்பதில் மிகவும் ஆர்வத்துடன்உள்ளேன்.
இந்திய, அமெரிக்க உறவை வலுப்படுத்த வாஜ்பாய் காட்டும் ஆர்வம் என்னைபிரமிக்க வைக்கிறது என்றார் கிளிண்டன்.
வாஜ்பாய் தற்போது நியூயார்க் நகரில் உள்ளார். புதன்கிழமை நான்கு நாள் பயணமாகதலைநகர் வாஷிங்டனுக்கு செல்கிறார். அங்கு அதிபர் கிளிண்டனைச் சந்திக்கிரார்.நாடாளுமன்ற காங்கிரஸ் சபையில் உரை நிகழ்த்துகிரார். மகாத்மா காந்தி சிலையைத்திறந்து வைக்கிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.