மேட்ச் பிக்ஸிங் வழக்கு .. கிங் கமிஷன் வக்கீல்கள் இந்தியா வருகை
டெல்லி:
கிரிக்கெட் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்துவதற்காக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிங் விசாரணை கமிஷனின் வழக்கறிஞர்கள் இந்தியாவரவுள்ளனர்.
வழக்கறிஞர்கள் இந்தியா வரும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அடுத்த சில வாரங்களில் இவர்கள் இந்தியா வரலாம் என்றும்அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது அந்த அணியின் கேப்டன் ஹான்சி குரோனியேஇந்தியாவில் உள்ள சில கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.
சஞ்சீவ் சாவ்லா என்ற கிரிக்கெட் சூதாட்டக்காரருடன் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் குரோனியே தொலைபேசியில் பேசியதை டெல்லி போலீஸார்பதிவு செய்தனர். இதையடுத்து தென் ஆப்பிரிக்க கேப்டன் பொறுப்பிலிருந்தும், அணியிலிருந்தும் குரோனியே நீக்கப்பட்டார்.
முதலில் தன் மீதான மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டை மறுத்த குரோனியே பின்னர் அதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகுறித்து விசாரிக்க எட்வர்ட் கிங் தலைமையில் தனி விசாரணை கமிஷனை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நியமித்தது.
இந்த விசாரணை கமிஷன், குரோனியேவிடம் பல முறை விசாரணை நடத்தியது. அது தவிர இந்த மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட மற்றவீரர்களிடமும் விசாரணை நடத்தியது.
குரோனியேவுக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகப் புகார்கள் வந்தன. இதையடுத்து இந்தியாவில்விசாரணை நடத்த கிங் விசாரணை கமிஷன் முடிவு செய்தது.
அதன்படி அக் கமிஷனின் வழக்கறிஞர்கள் அடுத்த சில வாரங்களில் இந்தியா வர உள்ளனர். டெல்லி போலீஸ், கிரிக்கெட் வாரிய அதிகாரிகள்,கிரிக்கெட் வீரர்கள் உள்பட அனைவரிடமும் அவர்கள் விசாரணை நடத்துவார்கள்.
கிங் கமிஷன் வழக்கறிஞர்கள் இந்தியா வருவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட்கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் தகவல் தரப்பட்டுள்ளது என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications