ஆசிரியரை எதிர்த்து பார்வையற்ற மாணவர்கள் உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

தலைமை ஆசிரியரை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த 40 கண்பார்வையற்ற மாணவர்கள் மயக்கமடைந்தனர். இவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலத்தில் கண் பார்வையற்றோர் உயர்நிலைப் பள்ளியில் 106 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் ராமசாமி என்பவர் தலைமைஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அப்போது கண் பார்வையற்றோருக்காக அன்பளிப்பாக வழங்கப்பட்ட பொருட்களை எடுத்துச் சென்று விட்டுவிட்டதாகப் போராட்டம் நடந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இப்போராட்டத்தால் இந்தப் பள்ளியிலிருந்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது மீண்டும் இந்தப்பள்ளிக்கே அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தலைமை ஆசிரியரை மாற்றக் கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு நாட்ளாகத் தொடர்ந்த இந்த உண்ணாவிரதத்தில், 33மாணவர்களும், 7 மாணவிகளும் மயக்கமடைந்தனர். இவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தலைமை ஆசிரியரை மாற்றக் கோரி மாவட்டக் கலெக்டர் நசீமுதினிடம் மனுக் கொடுத்தனர். ஒரு வாரத்தில் தக்க நடவடிக்கை எடுப்பதாகக் அவர்பதிலளித்திருந்தார். தற்போது இப்பிரச்னையையடுத்து, தலைமை ஆசிரியர் ராமசாமி, விடுமுறையில் சென்று விட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+