பல்பொடி நிறுவன உரிமையாளர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சர்க்கரை நோயின் கொடுமை தாங்க முடியாமல் பல்பொடி நிறுவன உரிமையாளர் சென்னையில் செவ்வாய்க்கிழமை தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னையில் உள்ள சூளை என்ற பகுதியைச் சேர்ந்தவர் எத்திராஜ். வயது 75. இவர் பல்பொடி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு ஐந்துமகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவருக்கு பல கோடி மதிப்புள்ள சொத்துக்களும், பல நிறுவனங்களும் உள்ளது.
எத்திராஜ் நீண்டகாலமாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் இவரது காலில் புண் ஏற்பட்டது. நீண்ட நாளாக ஆறாமல் இருந்தபுண்ணால் வலியில் துடித்துக் கொண்டிருந்தார் இவர்.
இதுகுறித்து வீட்டிலும் சொல்ல முடியாமல், வலியும் தாங்க முடியாமல் விரக்தியுற்ற நிலையில் இருந்தார் எத்திராஜ். இந்த நிலையில், வீட்டில் அனைவரும்தூங்கிக் கொண்டிருந்த போது தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications