அண்ணாவை நினைவு கூர்ந்த தமிழ்நாடு
சென்னை:
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணதுரையின் 92-வது பிறந்தநாள் தமிழகத்தில்வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் அண்ணா என்று அழைக்கப்படும்சி.என்.அண்ணாத்துரை. அவரது 92- வது பிறந்தநாள் வெள்ளிக்கிழமையன்றுதமிழகம் முழுவதும் கொண்டாடடப்படுகிறது.
இதை முன்னிட்டு தமிழக முதல்வர் கருணாநிதி தனது அமைச்சர்களுடனும், சென்னைநகர மேயர் மு.க.ஸ்டாலினுடனும் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்குமாலை அணிவித்தார். பிறகு அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைக்குக்கும்மாலை அணிவித்தார்.
அ.தி.மு..க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவும்அண்ணா சாலையிலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.
அண்ணா பிறந்த நாளையொட்டி, தமிழக அரசு திரைப்படக் கல்லூரி தயாரித்துள்ளஅண்ணா வாழ்கிறார் என்ற செய்திப்படத்தை தமிழகத்திலுள்ள பல தனியார்தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications