புலிகளின் மனித வெடிகுண்டுக்கு 6 பேர் பலி
கொழும்பு:
இலங்கையில் தலைநகர் கொழும்பின் மத்தியப் பகுதியான மார்டனா சாலையில் உள்ள பொதுமருத்துவமனை அருகே வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குஆண் மனித வெடிகுண்டு வெடித்ததில் 6 பேர் பலியானார்கள். மனித வெடிகுண்டாக வந்த விடுதலைப் புலியும் உடல் சிதறி இறந்தார். 28 பேர்படுகாயமடைந்தனர்.
மக்கள் கூட்டம் அதிக அளவில் உள்ள மார்டனா சாலையில் இக்குண்டுவெடிப்பு நடந்தது. பொதுமருத்துவமனை வாசலில் விடுதலைப் புலிகளின்தற்கொலைப்படையைச் சேர்ந்த மனித வெடிகுண்டு அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்த போது சந்தேகத்தின்பேரில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அவரைப்பிடித்து விசாரித்தார்.
அப்போது மனித வெடிகுண்டு தன் மேல் கட்டிவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் மனிதவெடிகுண்டு, கான்ஸ்டபிள் மற்றும் 3 பேர்இறந்தனர்.
28 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் 10 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்களில் ஒரு ராணுவ வீரர்,ஒரு கடற்படை அதிகாரி, இரண்டு மருத்துவமனை ஊழியர்கள் அடங்குவர்.
உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பஸ் போக்குவரத்துக்கள் மாற்றி விடப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு குறித்த பிறவிவரங்கள் எதுவும் தெரியவில்லை.
மேலும், தற்போது குண்டுவெடிப்பு நடந்த இதே இடத்தில்தான் கடந்த வருடம் அதிபர் சந்திரிகாவை கொலை செய்ய முயற்சி நடந்தது என்பதுநினைவிருக்கலாம்.
அக்டோபர் 10 ம் தேதி பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்முறையாக நடந்த பெரிய குண்டுவெடிப்புச் சம்பவம் இது என்பதுகுறிப்பிடத்தக்கது.
இலங்கை சுகாதாரத்துறை அமைச்சரை குறி வைத்து இந்த வெடிகுண்டு அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், மனித வெடிகுண்டாக வந்த நபரைபோலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்ததையடுத்து அவர் அந்த குண்டை அவர் வெடிக்கச் செய்தார். இதனால் , அமைச்சர் தப்பினார்.
யு.என்.ஐ.