பெண்களை கற்பழித்த மிராசுதார் கைது
விருதுநகர்:
விருதுநகரில் நான்கு பெண்களை கற்பழித்த காமக்கொடூரனான மிராசுதார் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தால் விருதுநகர் மாவட்டமே கொந்தளித்துப் போயிருக்கிறது. மகளிர் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் போராட்டத்திற்காககளமிறங்கிக் கொண்டிருக்கின்றன.
விஷயம் இதுதான். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகன் ஜெகன். மிராசுதார். இவர்களுக்கு சொந்தமானபெரிய காம்பவுண்ட் அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் இருக்கிறது. இங்கு ஏராளமானபேர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.
ஜெகன் பெண்களிடம் வம்பு செய்வது, அவர்களை ஆசை வார்த்தை கூறி கற்பழிப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தாராம்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன் இந்த காம்பவுண்டில் குடியிருந்த நான்கு இளம் பெண்களை டி.வி பார்க்கலாம் வாருங்கள் என்று கூறி அழைத்துச் சென்றுஅவர்களை கற்பழித்து விட்டாராம்.
பெரிய இடத்துப்பிள்ளை என்பதால் யாரும் இந்த சம்பவத்தைப்பற்றி மூச்சு விடுவதில்லை. இது ஜெகனுக்கு வசதியாக போய்விட்டது. வியாழக்கிழமைஇதுபோல் ஒரு பெண்ணை ஆசைக்கு இணங்கும் படி வற்புறுத்தியுள்ளார்.
இதைப்பார்த்த இன்னொரு பெண் ஏன் இப்படி அட்டூழியம் செய்கிறாய் உனக்கு வேறு வேலையே கிடையாதா என்று சத்தம் போட்டு இருக்கிறார்.இதனால் ஆத்திரம் அடைந்த ஜெகன் அந்தப் பெண்ணின் புடவையை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்த முயற்சித்தாராம்.
ஜெகனின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரிக்கவே, இனியும் இவனை விட்டால் ஏரியாவில் பெண்களே குடியிருக்க முடியாது என்று கருதிய அப்பகுதிபெண்கள் போலீஸில் புகார் கொடுக்க முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து ஏற்கனவே கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தாய் அனந்தம்மாள் என்பவர் அருப்புக்கோட்டை டவுண் போலீஸ் ஸ்டேஷனில் புகார்கொடுத்தார்.
போலீஸார் விரைந்து வந்து ஜெகனை கைதுசெய்ய முயற்சித்த போது போபாஸ் என்ற ரவுடி தடுத்தானாம். ஆனாலும் போலீஸார் ஜெகனையும், அந்தரவுடியையும் கைது செய்தனர். கற்பழிப்பு மன்னன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.












Click it and Unblock the Notifications