இந்தியாவுக்கு பில் கிளின்டன் பாராட்டு
வாஷிங்டன்:
தகவல் தொழில்நுட்பம், ஜனநாயக நெறிமுறை, அணு ஆயுத ஒழிப்பு ஆகியவற்றில் இந்தியா காட்டும்அபரிமிதமான ஈடுபாட்டுக்கு அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் வாஜ்பாய்க்கு வெள்ளைமாளிகையில் அதிபர் பில் கிளின்டன் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா காட்டும் ஆர்வமும், ஈடுபாடும் பாராட்டத்தக்கது.அதே போல் ஜனநாயக நெறிமுறைகளை காக்கவும், அணு ஆயுத ஒழிப்பில் காட்டும் ஈடுபாடும்அனைவராலும் பாராட்டப்படக்கூடியது.
தெற்காசியாவில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலைக்கு பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாணமுடியும் என்று நம்புகிறேன். அதற்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்று கருதுகிறேன்.
ஜனநாயக நெறிமுறை என்பது மேற்கத்திய நாடுகளுக்கு மட்டும் சொந்தமல்ல என்பதை எல்லாநாடுகளுக்கு இந்தியா உணர்த்தியுள்ளது. ஜனநாயக நெறிமுறைகளைக் கட்டிக் காப்பதில் இந்தியா காட்டியஉறுதிப்பாடு பாராட்டக்கூடியது.
இந்தியாவின் அந்த நடவடிக்கைதான் அந் நாட்டின் மீது அமெரிக்காவுக்கு அதிக ஈடுபாடும் நட்புறவும்கொள்ளத் தூண்டியது என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளன.அதேநேரத்தில் வறுமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றபிற துறைகளில் இரு நாடுகளும் இணைந்துசெயல்படும் என்றார் கிளின்டன்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications