கொஞ்சம் இறங்கி வருகிறார் ஜெயா
சென்னை:
கூட்டணி ஆட்சி குறித்து தேர்தலின் போது முடிவு செய்யப்படும் என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார்.
த.மா.கா.வின் கூட்டணி ஆட்சி கோரிக்கை பற்றி கேட்ட போதெல்லாம் கொதித்துப் போய் "அதெல்லாம் முடியாது என்றுபதிலளித்து வந்த ஜெயலலிதா, இப்போது கொஞ்சம் இறங்கி வந்துள்ளார். தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்வோம் என்றுபக்குவமாக பதிலளித்துள்ளார்.
சென்னையில் வெள்ளிக் கிழமை அண்ணா பிறந்த நாளை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக போயஸ் தோட்டத்தை விட்டுவெளியே வந்தார் ஜெயலலிதா. எப்போது வருவார் அவரை சந்திக்கலாம் என்று காத்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் கூட்டம்,அண்ணா சிலை அருகே அவரை சூழ்ந்தனர்.
ஜெயலலிதா அளித்த பேட்டி:
கேள்வி: சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க அணி வெற்றி பெற்றால் கூட்டணி அரசு அமைப்பீர்களா?
பதில்: இந்த பிரச்னையில் அ.தி.மு.க.வின் நிலை என்ன என்பதை ஏற்கனவே திட்டவட்டமாக கூறிவிட்டேன். தேர்தலுக்கு பின்அ.தி.மு.க தனித்து ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளேன்.
கேள்வி: நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். ஆனால், த.மா.கா. கூட்டணி ஆட்சி தான் அமைக்க வேண்டும் என்று வற்புறுத்தினால்என்ன செய்வீர்கள்?
பதில்: தேர்தலுக்கு இன்னும் அதிக நாட்கள் இருக்கின்றன. தேர்தலுக்கு பின்பு கூட்டணி அரசு அமைப்பது குறித்து, தேர்தல் நேரத்தில்தோழமைக் கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும்.
கேள்வி: காளிமுத்துவுக்கும் (அதிமுக), காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறதே.போகிற போக்கை பார்த்தால் கூட்டணியே வேண்டாம் என்று இளங்கோவன் ஓடி விடுவார் போல் இருக்கிறதே?
பதில்: அதெல்லாம் ஒன்றும் கிடையாது. நீங்கள் தான் (பத்திரிக்கைகள்) சின்ன சின்ன பிரச்னைகளை பெரிதுபடுத்துகிறீர்கள். என்னைப்பொருத்தவரையில் இது ஒரு பிரச்னையே இல்லை. சேலம் உருக்காலை விவகாரத்தில் கூட எங்கள் அழைப்பை ஏற்று எல்லாகட்சிகளும் வந்தன. எனவே இளங்கோவன் - காளிமுத்து மோதலால் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் வராது.
கேள்வி: நீங்கள் தலையிட்டு சமரசம் செய்யலாமே?
பதில்: அதற்கு அவசியமே இல்லை என்கிறேன் நான். நீங்கள் தான் எல்லாவற்றையும் பூதக் கண்ணாடி கொண்டு பார்க்கிறீர்கள்.
கேள்வி: தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப் போகிறீர்களாமே?
பதில்: ஆமாம். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications