தி.மு.க.வின் முப்பெரும் விழா தொடங்கியது
சென்னை:
தி.மு.கவின் முப்பெரும் விழா சென்னையில் வெள்ளிக் கிழமை தொடங்கியது
அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள், தி.மு.க தோன்றிய நாள் ஆகிய மூன்றையும் முப்பெரும் விழாவாக ஆண்டு தோறும் செப்டம்பர் 15முதல் 17ம் தேதி வரை தி.மு.க கொண்டாடி வருகிறது.
இதையொட்டி மூன்று நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வாடிக்கை. அதன்படி சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதல்நாள் நிகழ்ச்சிகள் வெள்ளிக் கிழமை மாலை 6 மணிக்கு துவங்கியது.
முதல் நாள் நிகழ்ச்சிக்கு தி.மு.க பொதுச்செயலாளர் அமைச்சர் அன்பழகன் தலைமை வகித்தார். தி.மு.க தலைவரும், முதல்வருமான கருணாநிதி, மேல்நிலைமற்றும் உயர் நிலைப் பள்ளித் தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தி.மு.க அறக்கட்டளை சார்பில் நிதியுதவி அளித்தார்.
முரசொலி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட பாரதிதாசன் கவிதைகள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மற்றும் பள்ளி மாணவமாணவிகளுக்கு சன்றிதழ்கள் வழங்கினார் முதல்வர்.
இந்நிகழ்ச்சியில் சிறந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கான சான்றிதழ்களும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன. இரவில் விருதுகள் வழங்கும் விழாநடைபெற்றது. இவ்வாண்டுக்கான பெரியார் விருது தென்னவனுக்கும், அண்ணா விருது சுப.தங்கவேலனுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருதுஅமுதனுக்கும், கலைஞர் விருது திராவிடமணிக்கும் வழங்கப்பட்டது. விருதுகளை வழங்கி அவர்களை கவுரவித்தார் முதல்வர். பின்னர் சங்கத்தமிழ் இசை நாட்டியநாடகம் நடைபெற்றது.
சனிக்கிழமை மாலையில் வள்ளுவர் கோட்டத்தில் பல்கலை மேடை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தி.மு.க இளைஞரணி சார்பில் நடைபெறும். இவ்விழாவில்மேயஸ் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். இவ்விழாவில் திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியினர் நடத்தும் "வேர்கள் விழுதுகள் என்ற சிறப்புநிகழ்ச்சி இடம் பெறுகிறது.
17ம் தேதி மாலை முப்பெரும் விழாப் பொதுக் கூட்டம் சென்னை கடற்கரையில் நடைபெறுகிறது. நாகூர் ஹனீபா இசையுடன் துவங்கும் இந்தப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் மாறன் ஆகியோர் பேசுகின்றனர்.