For Daily Alerts
Just In
ஆங்கிலத்தை எதிர்க்காதீர்கள் என்கிறார் அத்வானி
டெல்லி:
இந்தியை வளர்ப்பதற்காக ஆங்கில மொழியை எதிர்க்க வேண்டாம் என உள்துறைஅமைச்சர் அத்வானி கூறியுள்ளார்.
புத்தாயிரமாண்டு உலக இந்தி மாநாட்டை டெல்லியில் வியாழக்கிழமை துவக்கிவைத்து பேசுகையில் இக் கருத்தை அவர் தெரிவித்தார்.
மற்ற மொழிகளை எதிர்ப்பதை விட்டு விட்டு நமது தேசிய மொழியான இந்தி குறித்துநாம் பெருமை கொள்ள வேண்டும். ஆங்கிலத்தை எதிர்ப்பதை விட்டுவிட்டு,ஆங்கிலேய காலனி ஆதிக்க கலாச்சாரத்தை எதிர்க்க வேண்டும்.
நமது தாய்மொழி குறித்து நாம் பெருமை கொள்ள வேண்டும். இஸ்ரேலியர்கள் தங்கள்தாய் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றி வந்ததால்தான் அவர்கள் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளனர் .
சட்டத்தின் மூலம் இந்தி மொழியைப் பரப்ப முடியாது, மொழியை வளர்க்க சட்டத்தின்மூலம் நடவடிக்கை எடுப்பதை விட கலாச்சார விழிபபுணர்வு ஏற்படுவது அவசியம்எனவும் அத்வானி கூறினார்.
Story first published: Friday, September 15, 2000, 5:30 [IST]