கற்பழிப்பு வழக்கிலிருந்து பள்ளி நிர்வாகி விடுதலை

Subscribe to Oneindia Tamil

நெல்லை:

கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நெல்லையைச் சேர்ந்த செவிலியர் பள்ளி நிர்வாகி மீரான் மைதீன் விடுதலை செய்யப்பட்டார்.

திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்தவர் மீரான்மைதீன். இவர் பேட்டை உள்பட தமிழ்நாடு முழுவதும் செவிலியர் பள்ளிகள் வைத்து நடத்துகிறார். இந்தப்பள்ளிகளில் படிக்கும் மாணவிகளிடம் மீரான் தவறான முறையில் நடந்து கொள்வதாகவும், அவர்களில் இரண்டு பேரை மானபங்கப்படுத்தியதாகவும்இவர் மீது புகார் கூறப்பட்டது.

1998 ம் ஆண்டு நாகர்கோவிலைச் சேர்ந்த கீதா மற்றும் சங்கரன்கோவிலைச் சேர்ந்த செல்வி ஆகியோர் தங்கள் இருவரையும் மீரான் மைதீன்கற்பழித்துவிட்டதாகவும், அதற்கு உடந்தையாக மீரான் மைதீனின் மனைவி ரஷீதாபானு இருந்ததாகவும் புகார் கூறினர்.

அவர்களது புகாரில் 1989 ம் ஆண்டு இந்து மதத்தைச் சேர்ந்தவர்களான தங்களின் பெயர்களை முஸ்லீம் மதத்திற்கு மாற்றி அவர்களைத் திருமணம் செய்துகொண்டதாகவும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர்.

இந்த வழக்கு நெல்லை கூடுதல் உதவி செஷன்ஸ் கோர்ட்டில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிவானந்த ஜோதி தனதுதீர்ப்பில் கூறி இருப்பதாவது:

இவ்வழக்கில் முதல் குற்றவாளி மீரான் மைதீன் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்தது தொடர்பாக இரண்டாவது குற்றவாளியான அவரதுமனைவி ரஷிதாபானு மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்படவில்லை. இதனால் அவர்களை இவ்வழக்கிலிருந்து விடுவிக்கிறேன்என்று தீர்ப்பு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+