ஐ.நா. மில்லினியம் கூட்டத்தில் வைகோ
சென்னை:
ஐக்கிய நாடுகள் சபையின் புத்தாயிரமாவதாண்டு கூட்டத்தில் கலந்து கொள்ள இந்தியா சார்பில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட 6தலைவர்கள் கொண்ட குழு, அடுத்த மாதம் 16ம் தேதி அமெரிக்கா செல்கிறது.
இதுகுறித்து ம.தி.மு.க வெளியிட்ட அறிக்கை:
ஐ.நா. பொதுச்சபையின் 55வது வருடாந்திரக் கூட்டம் புத்தாயிரமாண்டுச் சிறப்புக் கூட்டமாகத் தற்போது நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தின்துவக்கத்தில் உலகில் முதல் முறையாக 160 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத் தொடர் டிசம்பர் 5ம் தேதி வரைநடைபெறவிருக்கிறது. தொடர்ந்து நடைபெறும் விவாதங்களின் அடிப்படையில் புத்தாயிரமாண்டுக் கூட்டறிக்கை வெளியிடப்படும்.
மிக முக்கியமான இந்தக் கூட்டத் தொடரில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்வதற்காக 6 பேர் கொண்ட குழுவை, பிரதமர் வாஜ்பாய்தேர்ந்தெடுத்துள்ளார். வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் இந்திரஜித் குப்தா, பா.ஜ.க.வை சேர்ந்த டெல்லி முன்னாள் முதல்வர் மதன்லால்குரானா, காங்கிரசை சேர்ந்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர்சிங், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்த பிரேம்சிங் ஆகியோர் இக்குழுவில்இடம்பெற்றுள்ளனர்.
21ம் நூற்றாண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாடுகள், முன்னுரிமைகள் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படும். இது தொடர்பாக ஐக்கிய நாடுகள்சபையின் பொதுச்செயலாளர் கோபி அன்னான் தொடக்கத்திலேயே சில பிரச்னைகளை முன் வைத்துள்ளார்.
அதனடிப்படையில் விவாதங்கள் நடைபெறும். இந்திய பிரதமர் வாஜ்பாய் செப்டம்பர் 8ம் தேதி இக்கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். வெளியுறவுத் துறைஅமைச்சர் ஜஸ்வந்த் சிங் 11ம் தேதி உரையாற்றினார்.
வைகோ உள்ளிட்ட இந்தியக் குழுவினர் அக்டோபர் 16ம் தேதி தல் 27ம் தேதி முடிய இருவார காலம் தினந்தோறும் ஐ.நா.சபையின் கூட்டத் தொடரில்கலந்து கொள்வர்.
உலகளாவிய அணு ஆயுதங்கள் ஒழிப்பு, ஐ.நா. பாதுகாப்பு சபையை திருத்தியமைப்பது, சர்வதேச பயங்கரவாதம், ஆப்கனிஸ்தான் உள்பட சர்வதேச நாடுகள்எதிர்கொள்ளும் மேலும் 180 பிரச்னைகள் குறித்து விவாதங்கள் நடைபெறும். இந்த விவாதங்களின் அடிப்படையில் வரலாற்றுச் சிறப்புமிக்கபுத்தாயிரமாண்டுக் கூட்டறிக்கை வெளியிடப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications