குடிபோதையில் போலீஸ்காரர்களை கடித்த வாலிபர்கள்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்:

ராமநாதபுரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 2 போலீஸ்காரர்களிடம் தகராறு செய்து, அவர்களைக் கடித்தநான்கு பேரைப் போலீஸார் கைது செய்தனர்.

திருச்சியைச் சேர்ந்த பன்னீர் செல்வம், பிரபு ஆகிய இருவரும் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில்உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தனர். இவர்கள் இருவரும், ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் வசித்து வந்தபாலபாரதி மற்றும் அரியசாமி ஆகியோருடன் சேர்ந்து அங்குள்ள பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்தப்பகுதி வழியே பாலுச்சாமி (30), மற்றும் வெங்கடேஷ் (32) ஆகிய இரண்டு பேரும் ரோந்துசுற்றிக் கொண்டிருந்தனர். அந்த சமயம் திடீரென்று அந்த நான்கு வாலிபர்களும் சேர்ந்து கொண்டுபோலீஸ்காரர்களை வம்புக்கு இழுத்து அடித்து உதைத்தனர்.

பிறகு, போலீஸ்காரர்களின் முகம், மார்புப் பகுதிகளில் கடித்துக் குதறினார்கள் என்றும் கூறப்படுகிறது. போலீஸ்காரர்வெங்கடேசனின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியையும் அவர்கள் பறித்துச் சென்று விட்டனர் என்றும்கூறப்படுகிறது.

படுகாயமடைந்த போலீஸ்காரர்கள் இருவரும் திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டுள்ளனர். தகராறு செய்த நான்கு வாலிபர்களும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் குடிபோதையில் அவர்கள் இத்தகராறில் ஈடுபட்டதாகத் தெரிய வந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+