வீரப்பனிடம் போக தமிழ்த் தீவிரவாதி திடீர் மறுப்பு
தர்மபுரி:
விடுதலையடைந்தால் காட்டுக்குச் சென்று வீரப்பனுடன் இணைந்து செயல்படுவேன் என கூறி வந்த பொன்னிவளவன் தற்போது காட்டுக்கு போகமாட்டேன் என்று கூறியுள்ளார்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் விடுவிக்கக் கோரும் 5 தமிழ் தீவிரவாதிகளில் பொன்னிவளவனும் ஒருவர். இவர் கொளத்தூர் வழக்கு தொடர்பாக,வியாழக்கிழமை தர்மபுரி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர் வெளியே வந்த பொன்னிவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:
வீரப்பன் கோரிக்கையை ஏற்று அரசு என்னை விடுவித்தாலும்கூட, மீண்டும் வீரப்பனுடன் சேர்வது குறித்த எண்ணம் இல்லை. வெளியே வந்த பின் தான் அதுகுறித்து யோசிப்பேன். அரசு என்னை விடுவித்தாலும், விடுவிக்காவிட்டாலும் நான் ஜாமீன் கேட்பதாக இருக்கிறேன் என்றார் பொன்னிவளவன்.
பொன்னிவளவனை ஜாமீனில் எடுக்க வெள்ளிக்கிழமை தர்மபுரி ஜே.எம்.நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவிருப்பதாக அவரது வக்கீல்கபிலன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications