தடையை மீறி சிறை நிரப்புவோம் .. த.மா.கா.
சென்னை:
தமிழக அரசு தடை விதித்தாலும் தடையை மீறி சிறை செல்வோம் என்று த.மா.கா .அறிவித்துள்ளது.
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய சிறை நிரப்பும் போராட்டத்தை வருகிற27ம் தேதி நடத்தப் போவதாக த.மா.கா. தலைவர் மூப்பனார் அறிவித்துள்ளார்.
இப்போராட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து சென்னையில் வெள்ளிக் கிழமை த.ம.கா.பொதுச்செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான பீட்டர் அல்போன்ஸ் பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 27--ம் தேதி காலை 10 மணிக்கு அரசுஅலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.
234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் இப்போராட்டம் நடைபெறும். மக்கள்பிரச்னைகளுக்காக நடத்தப்படும் இந்த போராட்டத்தில் அநாகரிகமான கோஷங்கள் இருக்காது.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் விட்டது. வீரப்பன் விவகாரம் எரிமலையாய்வெடிக்கிறது. சென்னைக்கு கிருஷ்ணா நீர் வராமல் குடிநீர் பிரச்னை வாட்டுகிறது. இதெல்லாம்வலியுறுத்தி தான் இந்த போராட்டமே.
இப்போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் கருணாநிதி சட்டம் தன் கடமையை செய்யும்என்று கூறியுள்ளார். சட்டத்தை பயன்படுத்தி எங்களின் நியாயமான போராட்டத்திற்கு அரசு தடைவிதித்தாலும், தடையை மீறி நாங்கள் மறியல் செய்வோம். சிறை செல்வோம் என்றார்.
பின்னர் த.மா.கா.வின் கூட்டணி ஆட்சி கோரிக்கை பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது,இதுதொடர்பாக சிதம்பரத்தில் நடந்த த.மா.கா. செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்அப்படியே நீடிக்கிறது என்று பதிலளித்தார் பீட்டர்.












Click it and Unblock the Notifications