சாலையிலும், தண்டவாளத்திலும் செல்லும் நவீன வாகனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சாலையிலும், ரயில் பாதையிலும் செல்லும் வகையிலான புதிய வாகனத்தையும், மின்சாரம் உற்பத்தி செய்யும் புதிய இயந்திரத்தையும் கண்டுபிடித்துள்ளதாகபிரபல தொழிலதிபர் வெங்கடாசல தூரன் தெரிவித்துள்ளார்.

வாராணசியில் உள்ள தூரன் வாகனம் மற்றும் மின் ஆராய்ச்சி மையத்தின் தலைவரான அவர், இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:

சாலையிலும் ரயில் பாதையிலும் செல்லும் புதிய வாகனத்தை நான் கண்டுபிடித்துள்ளேன். இதற்கு மிகக் குறைந்த அளவே எரிபொருள் செலவாகும்.

இப் புதிய வாகனம் ரயில் பாதையில் மணிக்கு 200 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்லக்கூடியது. இந்த வாகனத்தில் இரு விதமானசக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சாலையில் செல்வதற்கு ஏற்ப டயர் பொருத்து சக்கரங்களும், ரயில் பாதையில் செல்வதற்கு ஏற்ப இரும்புச் சக்கரங்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த வாகனத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்தியா போன்ற நாடுகளுக்கு இந்த வாகனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மோட்டார் வாகனங்கள் மற்றும் ரயில்களில் இருந்து எரிபொருள் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் புதிய மின் உற்பத்தி இயந்திரத்தையும் நான்கண்டுபிடித்துள்ளேன்.

நான் கண்டுபிடித்துள்ள புதிய வாகனம் மற்றும் புதிய மின் உற்பத்தி இயந்திரம் இரண்டுக்கும் பேடன்ட் (காப்புரிமை) பெறுவதற்கான முயற்சியில்ஈடுபட்டுள்ளேன். மத்திய அரசிடமிருந்தும் இதற்கு ஒப்புதல் பெற விண்ணப்பித்துள்ளேன் என்றார் தூரன்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+