குத்துச் சண்டை: இந்தியாவின் வெற்றிக் கணக்கைத் தொடக்கிவைப்பாரா சுரேஷ்?
சிட்னி:
சிட்னியில் நாளை நடைபெறும் குத்துச் சண்டைப் போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சுரேஷ் சிங் போட்டியிடுகிறார்.
முதல் சுற்றில் கொரியாவின் கிம் கி சுக்கை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார்.சனிக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய வீரர்,வீராங்கனைகள் அனைவரும் தோல்வியடைந்துவிட்டனர்.
இன்னும் வெற்றிக் கணக்கைத் தொடங்காமல் உள்ளது இந்தியா. ஞாயிற்றுக்கிழமைநடைபெறும் போட்டிகளில் இந்தியாவுக்கு சில வெற்றிகள் கிடைக்கலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
அதில் ஒன்றுதான் சுரேஷ் கலந்து கொள்ளும் குத்துச்சண்டைப் போட்டி. கொரியாவில்சமீபத்தில் நடைபெற்ற சியோல் கோப்பைப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றவர்சுரேஷ்.
சுரேஷை எதிர்த்துப் போட்டியிடும் கொரிய வீரர் ஒன்றும் பெரிய வீரர் அல்ல.சுரேஷுக்கு அவர் போட்டியாக இருக்கமாட்டார் என்று கருதப்படுகிறது.
ஒலிம்பிக் போட்டிக்குப் புறப்படுவதற்கு முன், பதக்கத்தை வெல்வதற்குத்தான் சிட்னிசெல்கிறேன். இல்லையென்றால் அங்கு செல்வதில் பயனில்லை என்று குறிப்பிட்டவர்சுரேஷ்.
தனது இந்த உறுதிப்பாட்டை போட்டியில் காட்டி நிச்சயம் அவர் பதக்கம்பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கையில் இந்திய மக்கள் உள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications