"தி.மு.க. கூட்டணியில்தான் மரியாதை கிடைக்கிறது"
விருத்தாசலம்:
தி.மு.க. கூட்டணியில்தான் அனைவருக்கும் மரியாதை கிடைக்கிறது என்று தமிழகராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி தெரிவித்தார்.
விருத்தாசலத்தில் நடைபெற்ற திமுக பிரமுகர் திருமணத்தில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் இப்போது உள்ள கட்சிகளில் தொண்டர்களுக்கும் கட்சியில் புதிதாகசேர்ந்தவர்களுக்கும் மரியாதை தரும் ஒரே கட்சி தி.மு.க.தான். எல்லோருக்கும்மரியாதை தரவேண்டும் என்ற உணர்வு உள்ளவர் திமுக தலைவர் கருணாநிதி.
தலைவரின் உணர்வை மதித்து திமுகவில் உள்ள மற்ற தலைவர்களும் இதே உணர்வைக்கடைப்பிடித்து வருகின்றனர்.
வன்னிய சமுதாயத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கொடுத்தற்காக அவருக்கு நன்றிசெலுத்த நாம் அனைவரும் கடைமைப்பட்டுள்ளோம்.
அ.தி.மு.க. கூட்டணியில் மீண்டும் சேரும்படி பழைய நண்பர்கள் அழைத்தனர். அங்குஇருந்தபோது 2, 3 முறை அவமானப்பட்டது போதும்.
வாழ்வோ, சாவோ தி.மு.க. கூட்டணியிலேயே இருந்து விட முடிவு செய்துவிட்டேன்.இங்குதான் உரிய மரியாதை கிடைக்கிறது என்றார் வாழப்பாடி ராமமூர்த்தி.