பூடானில் 18 உல்பா தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அஸ்ஸாமில் செயல்பட்டு வரும் உல்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 18 பேர்பூடானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அஸ்ஸாம் உள்பட வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாத நடவடிக்கையில் உல்பாதீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். இவர்களைத் தேடிக் கண்டுபிடித்து கைது செய்யும்பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக இப் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. அண்டை நாடானபூடானிலும் இந்த தேடுதல் வேட்டை நடைபெற்றது. கடந்த இரு வாரங்களாகபூடானில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் 18 உல்பா தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களில் உல்பா தீவிரவாத இயத்தின் துணை கமாண்டர் ராஜுபரூவாவும் அடங்குவார். இவர் பூடானில் இருந்து அங்கு தனது அமைப்பினருடன்தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications