விமான விபத்து: விசாரணையில் இலங்கைக்கு வெளிநாட்டு நிபுணர்கள் உதவி
கொழும்பு:
இலங்கையில் சனிக்கிழமை நடந்த விமான விபத்து பற்றி நடைபெறும் விசாரணையில்இலங்கை அரசுக்கு உதவ வெளிநாட்டு நிபுணர்கள் வருகின்றனர்.
இலங்கை துறைமுகங்கள் துறை அமைச்சர் அஷ்ரப் உள்பட 15 பேர் பயணம் செய்தஹெலிகாப்டர் கேகல்லே மாவட்டத்தில் உரகான்டா மலைப்பகுதியில் விழுந்துநொறுங்கியது.
இதில் அமைச்சர் உள்பட 15 பேர் பலியானார்கள். இந்த விபத்து எவ்வாறு நடந்ததுஎன்று தெரியவில்லை. இந்த விபத்து பற்றி விசாரணை நடத்த 4 பேர் கொண்ட சிறப்புவிசாரணை கமிஷனை இலங்கை விமானப் படை நியமித்துள்ளது.
இந்த சிறப்பு விசாரணை கமிஷன் விசாரணைக்கு உதவ உக்ரைன் நாட்டு மிக் 17 ரகஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் இலங்கை வரவுள்ளனர்.
விமான விபத்துக்கு மோசமான வானிலை காரணமாக இருக்கலாம் என்றுகருதப்படுகிறது. ஆனால், இந்த விபத்துக்கு எதிரிகளின் சதி காரணமாக இருக்கலாம்என்று அஷ்ரப்பின் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, விமான விபத்தில் பலியான அமைச்சர் அஷ்ரப்பின் உடல் சனிக்கிழமைமாலை அடக்கம் செய்யப்பட்டது.
கொழும்பில் உள்ள ஜவாட்டா முஸ்லிம் இடுகாட்டில் இறுதிச் சடங்கு நடைபெற்றது.இதில் ஏராளமான இலங்கை முஸ்லிம் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
அமைச்சரின் மரணத்தை அடுத்து இலங்கையில் உள்ள அனைத்து அரசுஅலுவலகங்களிலும் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றுஇலங்கை அரசு அறிவித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications