For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கிச் சூடு - 6 பேர் சாவு

By Staff
Google Oneindia Tamil News

அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வன்முறைஏற்பட்டது. இதில் 6 பேர் இறந்தனர். 20 பேருக்கு மேல் காயமடைந்தனர்.

தாரியாபூர் போலீஸ் நிலைய எல்லைக்குள் வல்லெட் என்ற நகரில் நடந்தவாக்குப்பதிவில் கள்ளவோட்டு போடப்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாகஇரு கோஷ்டியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

மோதலில் ஈடுபட்ட கும்பலைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளைவீசினர். அப்படியும் கும்பல் கலையாததால் தடியடி நடத்தப்பட்டது. இதையடுத்து அக்கும்பல் வன்முறையில் ஈடுபட்டது.

கடைகளையும், வாகனங்களையும் அக் கும்பல் கல்வீசித் தாக்கியது. இதையடுத்து அக்கும்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 20 பேருக்கு மேல்காயமடைந்தனர்.

இறந்த அனைவரும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்தனரா அல்லது கோஷ்டிமோதலில் இறந்தனரா என்று தெரியவில்லை என்று நகர போலீஸ் கமிஷனர் பாண்டேதெரிவித்தார்.

இச் சம்பவத்தை அடுத்து தாரியாபூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது. தாரியாபூர் பகுதியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு வேறுதேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

குஜராத்தின் பிற பகுதிகளிலும் வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக இருந்தது. குறைவானஎண்ணிக்கையில்தான் மக்கள் வாக்களித்தனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X