இலங்கை சிறையிலிருந்த தமிழக மீனவர்கள் விடுதலை
சென்னை:
இலங்கை சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மூன்று தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டு திங்கள்கிழமை விமானம் மூலம் தமிழகம் அழைத்துவரப்படுகிறார்கள்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
நாகப்பட்டினம் மாவட்டம் வானகிரியைச் சேர்ந்த மீனவர்கள் ரத்னவேல் சேகர், ரத்னவேல் ராஜா, சிவானந்தன் ரவி. இவர்கள் மூன்று பேரும்கடந்த ஏப்ரல் மாதம் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது வழிதெரியாமல் இலங்கை கடற்பகுதிக்குள் சென்றுவிட்டனர். இதையடுத்து இலங்கை கடற்படையினர் இந்த மூன்று பேரையும் கைது செய்துசிறையில் அடைத்தனர்.
இவர்களை மீட்பதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. தற்போது அந்த மீனவர்கள் மூன்று பேரையும் விடுவிக்க இலங்கை அரசுஒப்புக்கொண்டுள்ளது.
அதன்படி, மீனவர்கள் மூன்று பேரும் விடுவிக்கப்பட்டு, திருவனந்தபுரம் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அங்கிருந்து அவர்களது சொந்தஊரானவானகிரிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications