பெட்டிக்கடை to
மதுரை:
சாதாரண பெட்டிக் கடை நடத்தி வந்தவர் தான் பின்னாளில் நளின சேகரன் சாமியாராகஉருமாறியிருக்கிறார். பின்னர் சொகுசு கார், செல்போன் என்று உல்லாச வாழ்க்கைவாழ அவருக்கு ஆசிரமம் கை கொடுத்துள்ளது.
நரபலி புகழ் நளினசேகரன் பற்றிய புதுப் புதுத் தகவல்கள் வெளிவந்து கொண்டேஇருக்கின்றன.
இவரது சொந்த ஊர் மேலூர் அருகே உள்ள அ.வள்ளாலப்பட்டி. இங்கு பெட்டிக் கடைநடத்தி வந்தார். பின்னர் சிவகங்கைச் சாமியார் முத்துக்காமாட்சியுடன் இவருக்குதொடர்பு ஏற்பட்டது. அவரது சீடராக மாறினார்.
சிவகங்கைச் சாமியார் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து அங்கிருந்துகிளம்பிய நளினசேகரன், இடையமேலூரில் தனி ஆசிரமத்தை தொடங்கினார்.ஆனால், அங்குள்ள மக்கள் அதை எதிர்த்தனர். அதனால் ஊரைக் காலி பண்ணி விட்டுமதுரை வந்தார்.
மதுரை நீதிமன்றம் அருகே ஜீனஸ் ஐ.டி.ஐ. என்ற நிறுவனத்தை தொடங்கினார். தன்னைஒரு பத்திரிகையாளர் என்று சொல்லிக் கொண்டார். அதற்காக அதே நிறுவனத்தில்பத்திரிகையாளர் பயிற்சி மையம் ஒன்றையும் ஆரம்பித்தார்.
இதை கருவியாக வைத்துக் கொண்டு முக்கியப் பிரமுகர்களுடன் தொடர்பை வளர்த்தார்.
கொஞ்சம் பிரபலமானதும் களிமங்கலம் அருகே அனாதை குழந்தைகள் காப்பகம்ஒன்றை துவக்கினார்.
பின்னர் முதியோர் இல்லம், பயிற்சி வகுப்புகள் என்று வரிசையாக வளர்ந்தார்.டெலிபோன், டெலக்ஸ், பேக்ஸ், ஏ.சி., கார், வாகனங்கள், செல் போன் என்று வசதிபடைத்தவராக மாறினார்.
அப்போது தான் யாருக்கும் சந்தேகம் வராத வகையில், தன்னை ஒரு சாமியார் என்றுகாட்டிக் கொள்ள முற்பட்டார். காவி உடை, ருத்ராட்ச மாலையுடன் காட்சி அளிக்கஆரம்பித்தார். அடிக்கடி மவுன விரதம் இருந்து சாமியாருக்கான முழு தகுதியையும்பெற்றவர் போல் தன்னைக் காட்டிக் கொண்டார்.
அழகர்கோவில் அருகே ஒரு ஆசிரமத்தை ஆரம்பித்தார். பல்வேறு பயிற்சிவகுப்புகளை நடத்திய நளினசேகரன், பயிற்சி முடித்த பெண்களை ஆசிரமத்திற்குவரவழைத்து விருந்து கொடுப்பாராம்.
பெரும்பாலும் இவரது பயிற்சி வகுப்பில் இளம் பெண்கள் தான் அதிகம்படித்தார்களாம். பாவம் அவர்கள் இப்போது அதிர்ச்சியில் உறைந்து போய்உள்ளனராம்.












Click it and Unblock the Notifications