For Daily Alerts
Just In
தமிழகத்தில் பெரியார் பிறந்தநாள் விழா
சென்னை:
தமிழகம் முழுவதும் தந்தை பெரியாரின் 122 வது பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி அனைத்து கட்சிகள் சார்பிலும் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள மே தின பூங்கா அருகில் உள்ள பெரியார் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு முதல்வர் கருணாநிதியும், மேயர்ஸ்டாலினும் மாலை அணிவித்தார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அண்ணா மேம்பாலத்திற்கு கீழ் உள்ள பெரியார் சிலைக்கு காலை 9 மணிக்கு மாலை அணிவித்தார்.
த.மா.கா. தலைவர் மூப்பனார், சிம்சன் அருகேயுள்ள பெரியார் சிலைக்கு காலை 10.00 மணிக்கும், காலை 9.00 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிதலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் மாலை அணிவித்தார்கள்.
தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பெரியாரின் பிறந்தநாள் விழா நடைபெறுகிறது.
Story first published: Sunday, September 17, 2000, 5:30 [IST]