பெட்ரோல் விலை உயர்கிறது?
சென்னை:
பெட்ரோலிய கச்சா எண்ணை விலை பேரல் ஒன்றுக்கு 36 டாலராக அதிகரிக்க இருப்பதால் பெட்ரோலின் விலையும் உயருமா என்ற சந்தேகம்எழுந்துள்ளது.
மேலும் கச்சா எண்ணை இறக்குமதி செலவு 57, ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 70 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமையல் கியாஸ் சிலிண்டர் ஒன்றுக்கு மத்திய அரசு 163 ரூபாய் மானியம் அளித்து வருகிறது. இந்த மானியத்தின் அளவை மேலும் அதிகரிக்க முடியாதுஎன்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது.
எனவே எண்ணை தொகுப்பு நிதியில் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்க பெட்ரோலிய பொருட்கள் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம்ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் பொன்னுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து பிரதமர் இந்தியா திரும்பியதும் ஆலோசிக்கப்படும். பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பு,பெட்ரோல் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 8 லட்சம் பேரலாக உயர்த்த முடிவு செய்திருக்கிறது. என்றாலும் பெட்ரோலின் தேவை ஒரு நாளைக்கு 12லட்சம் பேரல்கள் என்பதால் உற்பத்தியில் பற்றாக்குறைதான் நிலவி வருகிறது.
பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை குறைக்குமாறு மத்திய நிதி அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எதுவானாலும் பிரதமர் வாஜ்பாய்டெல்லி திரும்பியதும்தான் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்றார் அமைச்சர் பொன்னுசாமி.












Click it and Unblock the Notifications