சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் சாமரான்ச்சின் மனைவி மரணம்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
சர்வதேச ஒலிம்பிக் சங்கத் தலைவர் அன்தோனியோ சாமரான்ச்சின் மனைவி மரியாதெரசா (67) சனிக்கிழமை மரணடைந்தார்.
புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில்சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
சிட்னியில் ஒலிம்பிக் விழா தொடக்க நிகழ்ச்சியில் சாமரான்ச் கலந்து கொண்டார்.அப்போது தெரசாவின் உடல் நிலை மோசம் என்று அவருக்குக் தகவல் தரப்பட்டது.
இதையடுத்து அவர் உடனடியாக தனது சொந்த நாடான ஸ்பெயினுக்குத் திரும்பினார்.பார்சிலோனாவில் மனைவி சேர்க்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குச் சென்றார்.
ஆனால், அவர் வருவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே தெரசாஇறந்துவிட்டாார்.
சாமரான்ச்சின் மனைவி இறந்ததை அடுத்து சிட்னியில் ஒலிம்பிக் ஸ்டேடியத்தில்ஏற்றப்பட்ட ஒலிம்பிக் கொடி அரைக் கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமைபறக்கவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications