"மொழியை பிழையின்றி கற்கவேண்டும்"
கோவை:
எந்த மொழியைக் கற்றாலும் செம்மையாகக் கற்க வேண்டும். பிழையின்றி அதனைப் பயன்படுத்த வேண்டும் என பாரதியார் பல்கலைக் கழகதுணைவேந்தர் இளங்கோ பேசினார்.
கோவை மகளிர் கல்வியியல் கல்லூரியில் பாரதி மலைவாழ் மக்கள் மன்றம் சார்பாக பாரதியார் பிறந்த நாள் விழா நடந்தது. விழாவில் பாரதியார்பல்கலைக் கழகத் துணைவேந்தர் இளங்கோ பேசியதாவது:
ஒரு மொழியைக் கற்கும்போதே பிழையின்றி எழுத கற்றுக் கொள்ள வேண்டும். அதனை உச்சரிப்பு மாறாமல் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்.எந்த மொழியானாலும் அதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பிளஸ்டூ பாடத் திட்டத்தில் உள்ள மொழிப் பாடங்களை யாரும் விரும்பிப் படிப்பதில்லை. இந்த மொழிப் பாடங்களில் கிடைக்கும் மதிப் பெண்கள் உயர் கல்விக்குஉதவுவதில்லை. எனவே, மாணவர்கள் மொழிப் பாடங்களில் அதிக கவனம் செலுத்தாமல், பிற பாடங்களில் கவனம் செலுத்துகின்றனர்.
இதன் விளைவாக இன்னும் பல பட்டதாரிகள் பிழையின்றி எழுத, படிக்க எந்த மொழியிலும் உரிய தேர்ச்சி பெறவில்லை. மொழிப் பாடங்களில் தெளிவாகஇருந்தால் தான் நமது எண்ணம் பிறருக்கு சரியான முறையில் புரியும்.
இவ்வாறு துணைவேந்தர் இளங்கோ பேசினார். விழாவில், கல்லூரி முதல்வர் குமாரசாமி, பாரதி மலைவாழ் மக்கள் மன்றத் தலைவர் தேவராஜ்ஆகியோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications