For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனைவி, மகளைக் கொன்று தொழிலாளி தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கள் இறக்கும் தொழிலாளி தனது மனைவிமற்றும் மகளுக்குப் பூச்சி மருந்து கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். ஞாயிற்றுக்கிழமை இச் சம்பவம் நடந்தது.

இது பற்றி கூறப்படுவதாவது:

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்(45). கள் இறக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின்காரணமாக நிறைய கடன் வாங்கினார்.

கடன் அதிகமாகியதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சேகர் குடும்பத்தினருடன்தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்துமனைவி, மகன் மற்றும் மகளுக்குக் கொடுத்தார். பிறகு தானும் பூச்சி மருந்து குடித்தார்.

பின்னர் விஷயம் தெரிந்து பக்கத்து வீட்டினர் வந்து பார்த்தபோது சேகர் மற்றும் அவரதுமனைவி, மகள் மூன்று பேரும் இறந்துகிடந்தனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தசேகரின் 5 வயது மகனை அவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இச் சம்பவம் குறித்து திருப்போரூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். சட்டவிரோதநடவடிக்கையில் சேகர் ஈடுபட்டு வந்ததாகக் கூறி அவரை போலீஸார் கைது செய்துபோலீஸ் நிலையத்தில் வைத்திருந்தனர்.

உள்ளூர் திமுக பிரமுகர் தலையீட்டின் பேரில் சேகர் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டார்.அதற்குப் பிறகு அவர் தற்கொலை செய்து கொண்டார். போலீஸார் கைது செய்ததால்மனமுடைந்து சேகர் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X