வாஜ்பாயியின் பயணம் வெற்றி - கிளின்டன்
வாஷிங்டன்:
இந்தியப் பிரதமர் வாஜ்பாயியின் அமெரிக்கப் பயணம் பெரிய வெற்றி என்றுஅமெரிக்க அதிபர் பில் கிளின்டன் தெரிவித்தார்.
வாஷிங்டனில் மகாத்மா காந்தி நினைவு மண்டபத்தை அவரும், வாஜ்பாயியும் சேர்ந்துதிறந்து வைத்தனர். அப்போது அங்கு நிருபர்களிடம் கிளின்டன் கூறியதாவது:
வாஜ்பாயியின் இந்தியப் பயணம் பெரும் வெற்றி. அவரது பயணத்தால்இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவு மேலும் வலுப்படும்.
எதிர்காலத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் சிறந்த பொருளாதாரபார்ட்னர்களாகவும், அரசியல் பார்ட்னர்களாகவும் விளங்கும் என்பது உறுதி. ஐக்கியநாடுகள் சபை மட்டுமல்ல மற்ற சர்வதேச அமைப்புகளிலும் யில் இரு நாடுகளும்இணைந்து செயல்படும் என்று நம்புகிறேன்.
அணு ஆயுதம் ஒழிப்பில் இரு நாடுகளின் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.ஆனால் அது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே கருத்து வேற்றுமை நிலவுகிறது.
இருந்தாலும், அணு ஆயுதத்தைப் போலவே பயங்கரமான ரசாயனம் மற்றும் உயிரியல்ஆயதங்கள் ஆகியவற்றை ஒழிப்பதிலும் இரு நாடுகளும் இணைந்துசெயல்படவேண்டும்.
இந்திய துணைக் கண்டத்தில் அமைதியை ஏற்படுத்த இந்தியாவுடன் இணைந்து வேறுஎந்த நாடாவது முயற்சி மேற்கொள்ளும் என்று நம்புகிறேன் என்றார் கிளின்டன்.
ஐ.ஏ.என்.எஸ்.