புலிகள் - ராணுவம் கடும் மோதல்: 108 பேர் சாவு
கொழும்பு:
புலிகளிடமிருந்து இலங்கை ராணுவம் மீண்டும் கைப்பற்றிய சாவகச்சேரியில் நடந்துவரும் சண்டையில் இதுவரை 108 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று
இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கருணரத்னே தெரிவித்தார்.
இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாண தீபகற்பத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றானசாவகச்சேரியை விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கை ராணுவம் ஞாயிற்றுக்கிழமைகைப்பற்றியது.
இரு தரப்பினருக்கும் இடையே 3 மணி நேரம் நடந்த கடுமையான சண்டைக்குப் பிறகுசாவகச்சேரியை இலங்கை ராணுவம் கைப்பற்றியது. அத் தாக்குதலில் உயிரழந்தவர்கள்பற்றி தகவல் ஏதும் இல்லை.
இந் நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் இலங்கை ராணுவத்தினர் மீதுவிடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ராணுவத்தினரும் பதிலுக்குத்தாக்கி வருகின்றனர்.
இதில் 15 ராணுவத்தினர் உள்பட 108 பேர் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் விடுதலைப்புலிகள் என்று ராணுவம் கூறுகிறது. சம்பவ இடத்திலிருந்து 18 புலிகளின் சடலத்தைராணுவம் கைப்பற்றியுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications