For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் கர்னம் மல்லேஸ்வரி

By Staff
Google Oneindia Tamil News

சிட்னி:

பெண்களுக்கான 69 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் கர்னம் மல்லேஸ்வரிவெண்கலப் பதக்கம் பெற்றார்.

இதன் மூலம் சிட்னி ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை இந்தியா பெற்றது. அது தவிர,ஒலிம்பிக்கில் ஹாக்கிப் போட்டிக்கு அடுத்து தனி நபர் பிரிவில் 3-வது நபராக பதக்கம்வென்று சாதனை படைத்துள்ளார் கர்னம் மல்லேஸ்வரி.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் கர்னம் மல்லேஸ்வரி மொத்தம் 240கிலோ எடை தூக்கினார். ஸ்நாட்சில் 110 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க்கில் 130கிலோவும் அவர் தூக்கினார்.

இப் போட்டியில் சீன வீராங்கனை லின் வீனிங் 242.5 கிலோ தூக்கி தங்கப் பதக்கம்வென்றார். இரண்டாம் இடம் பிடித்த ஹங்கேரியின் மார்க்கஸ் எர்ஸெபெத்தும் அதேஎடையைத் தூக்கினார். ஆனால், உடல் எடை குறைவு காரணமாக லின் வீனிங்குக்குத்தங்கப் பதக்கம் கிடைத்தது.

இரண்டாவது இடம் பிடித்தாலும் ஸ்நாட்ச் பிரிவில் 112.5 கிலோ எடை தூக்கி உலகசாதனை படைத்தார் ஹங்கேரி வீராங்கனை.

கர்னம் மல்லேஸ்வரி வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் பதக்கப்பட்டியலில்இந்தியாவும் இடம் பெற்றது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X