தூத்துக்குடியில் நடுக்கடலில் மின்உற்பத்தி நிலையம்
சென்னை:
தூத்துக்குடியில் உலகிலேயே முதன் முறையாக நடுக்கடலில் மிதக்கும் மின் நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷிதெரிவித்தார்.
சென்னை அருகேயுள்ள பள்ளிக்கரணையில் 50 ஏக்கர் பரப்பளவில் பன்னிரெண்டரை கோடிரூபாய் செலவில் தேசிய கடல் தொழில் நுட்ப நிலையம்அமைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்ட மத்திய கடல்வளத்துறை அமைச்சர் முரளி மனோகர்ஜோஷி நிலையத்தை தொடங்கி வைத்துப் பேசுகையில்,உலகத்திலேயே முதன் முறையாக நடுக்கடலுக்குள் மிதக்கும் மின் உற்பத்தி நிலையம் தூத்துக்குடியில் அமைக்கப்பட இருக்கிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும். கடல் நீரின் மேல்பகுதியிலும், கீழ்ப்பகுதியிலும் உள்ள வெப்ப வேறுபாட்டை பயன்படுத்திமின் சாரம் உற்பத்தி செய்யப்படும்.
இந்தத்திட்டம் மூலம் ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அமைய இருக்கும் மிதக்கும் மின்நிலையங்களுக்கு இது முன்னோடியாக இருக்கும்.
நடுக்கடலில் சுமார் ஆயிரம் மீட்டர் ஆழத்திற்குள் இந்த மின் நிலையம் இயங்கும். அந்த இடத்தில் ஒவ்வொரு பருவ காலத்திலும் கடல் நீரின் வெப்பம் எப்படிமாறுபடுகிறது என்பதையும், கடலின் அடிப்பகுதியில் மண்ணின் உறுதி எப்படி உள்ளது என்பதையும் இந்த தேசிய கடல் தொழில்நுட்ப நிலையம் ஆராயும்.
மிதக்கும் மின் நிலையத்துக்கான கட்டுமான பணிகள் கோவாவில் நடந்து வருகிறது என்றார்முரளிமனோகர் ஜோஷி.