அஞ்சலி வேத்பதக் தோற்றார் - துப்பாக்கிச் சுடுதலில் முடிவுற்றது இந்தியாவின் சவால்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
துப்பாக்கிச் சுடும் போட்டியில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 பொசிஷன்)பிரிவில் இந்தியாவின் அஞ்சலி வேத்பதக் தோல்வியுற்றார்.
புதன்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் அவர் 600-க்கு 566 புள்ளிகள் எடுத்து33-வது இடத்தைப் பெற்றார். இதையடுத்து துப்பாக்கிச் சுடும் போட்டியில்இந்தியாவின் சவால் முடிவு பெற்றது.
ஏற்கெனவே பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் பங்கு கொண்ட அஞ்சலி8-வது இடம் பெற்று தோல்வியுற்றார். இருப்பினும், ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடும்போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்றபெருமையை அவர் பெற்றார்.
இப் போட்டியில் போலந்து வீராங்கனை ரேனடா மாயர் ரோஸான்ஸ்கா 585 புள்ளிகள்எடுத்து தங்கப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications