கோவை அருகே பஸ்கள் மோதல்: 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை அருகே அரசு பஸ்சும், தனியார் பஸ்சும் மோதிக் கொண்டதில் 4 பேர்இறந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.
கோவையிலிருந்து சோமனூருக்கு ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அதேசமயம் திருப்பூரிலிருந்து அரசு பஸ் ஒன்று கோவையை நோக்கி வந்து கொண்டிருந்தது.
இரண்டு பஸ்களும் சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவு என்ற இடத்தில் நேருக்கு நேர்மோதிக் கொண்டன. இந்த மோதலில், இரண்டு பஸ்களின் முன்பகுதிகள்சேதமடைந்தன. இந்த விபத்தில் நான்கு பேர் இறந்தனர். மேலும், 30 பேர்காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications